October 26, 2011

ஏழாம் அறிவு - விமர்சனம்

16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் போதிதர்மனின் வரலாற்று முன்னுரையோடு படம் தொடங்குகிறது. நாம் மறந்துபோன ஒரு தமிழனை ஞாபகபடுத்தியதற்காக இயக்குனர் A.R. முருகதாஸிக்கு ஒரு பூச்செண்டு. சீனாவின் ஒர் கிராமத்தில், அந்நாளில் ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்படுக்கின்றனர். அந்நோயை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுக்க அங்கே செல்கிறார் போதிதர்மன். முதலில் அவரை ஏற்காத மக்கள், இறந்து போனாதாக அவர்களால் ஒதுக்கப்பட்ட குழந்தையை, தன் மருத்துவத்தால் குணப்படுத்திய பின் அவரை ஏற்றுக்கொள்வதோடு இல்லாமல் அவரை கடவுளாக போற்றுகின்றனர். அங்கே தான் கற்ற கலையையும் அவர்களுக்கு பயிற்றுகிறார். அக்கலையே இன்னாளில் ’குங்ஃபூ’ என்றழைக்கப்படுகிறது. பின்னர் தான் வந்த வேலை முடிவுற்றதென தாயகம் திரும்புவதாக அவர்களிடம் சொல்கிறார். ஆனால் ’அக்கிராம’ மக்கள் அவர் சென்றுவிட்டால் தங்கள் நாட்டிற்கு பெரும் சேதம் விழையுமென தவறாக ஆருடம் கணிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவரை விசம் கொடுத்து கொல்கிறார்கள்.

இனி கதை இக்காலத்திற்கு திரும்புகிறது.

சர்க்கஸ் ஒன்றில் கலைக்கூத்தாடியாக வேலை செய்கிறான் அரவிந்த்(சூர்யா).  ஒரு சர்க்கஸ் குரங்கை தன் ஆராய்ச்சிக்காக இரவலாக கேட்க வருகிறாள் சுபா(ஸ்ருதிஹாசன்). தமிழ் சினிமாவின் ’தொன்றுதொட்ட’ கண்டவுடன் காதல் கொள்கிறான் கௌதம். ஆனால் ஆராய்ச்சிக்காக அவள் தேடி வந்தது குரங்கல்ல ’தான்’ தான் என்று கண்டுகொள்கிறான் அரவிந்த்.

போதிதர்மனின் சந்ததியான அரவிந்தின் மூலம் மீண்டும் போதிதர்மனின் பண்புகளை, அறிவை (ஏழாம் அறிவு!!) உயிர்ப்பிக்கலாம் என சுபா கௌதமிடம் எடுத்து கூறுகிறாள்.


இதற்கிடையில் சீனாவிலிருத்து ஆறாம் நூற்றாண்டில் பரவிய அதே கிருமியை இந்தியாவில் பரப்ப சீனா அரசால் ஏவப்பட்ட ஒருவனாக  டோங் லீ இங்கே களமிறக்கபடுகிறான். அப்புறம் ”நடந்தது என்ன?” என்பதை வெண் திரையில் காண்க...

படம் முழுதும் சூர்யா அனாசயம் செய்கிறார். போதிதர்மனாகவும்,அரவிந்தாகவும் பின்னுகிறார். ஸ்ருதி நடிப்பு ஒகெ ரகம். தன் நண்பன் இறந்த காட்சியில் அவர் அழுவதில் ஏனோ ’மகாநதி’ கமல் தெரிகிறார். சரியான வில்லானாக Johnny Tri Nguyen சூர்யாவையும் நம்மையும் பயப்பட வைக்கிறார். Warm Welcome Mr.Johnny Tri Nguyen. பாடல்களில் ‘முன்அ ந்தி’, ‘யெம்மா யெம்மா’ இனி சிலகாலம் நம் உதடுகளில் முனுமுனுக்கும். ’இன்னும் என்ன தோழா’ தமிழர்களுக்கான ட்ரிபூயூட்.

A.R. முருகதாஸின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது. வசனங்களிலும் முருகதாஸின் முத்திரை.

“இலங்கையில திருப்பி அடிச்சோம். என்னாச்சு? உயிர் போனது தான் மிச்சம்”

 இதற்கு சூர்யா பேசும் counter dialogue க்கு தியேட்டரில் செம கைத்தட்டல்.


இதை போல பல பளிச் வசனங்கள்..

கண்டிப்பாக தமிழர்களுக்கு இந்தப்படம் ஒரு விருந்து!!

டிஸ்கி: பழனி ரமேஸ் தியேட்டர்ல சாப்ட முட்டை போண்டா சூப்பர்!!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

G.BALAN said...

அருமை‌யா‌ன வி‌மர்‌சனம்‌. ஆனா‌ல்‌ சர்‌க்‌கஸ்‌ கலை‌ஞனி‌ன்‌ பெ‌யர்‌ அரவி‌ந்‌த்‌. மா‌ற்‌றுங்‌க கி‌ருபா‌.
அன்‌பு‌டன்‌ பா‌லன்‌

சக்தி கல்வி மையம் said...

super review.,
thanks 4 sharing..

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

@G.BALAN FILM PRO திருத்தியமைக்கு நன்றி!

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!- கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!!

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்