சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே!. முன் ஏற்பாடு இல்லாத பயணத்திற்கு ரயில் பயணம் ஏற்றதல்ல.
அப்படியும் நாம் முன்பதிவிற்கு நுழையும் பொது எப்போதும் காத்திருப்போர் பட்டியலில் இடம் வாங்குதே வாடிக்கையாக இருக்கும். அதனால் பேருந்து பயணத்தையே நாடுவோம்.
பேருந்தில் இடம் கிடைக்காத நேரத்தில், கடைசி பிரமாஸ்திரம் தத்கால் டிக்கெட் பதிவதே!. அதுவும் சாதாரணமானது இல்லை. அதிருஷ்டமும், இணைய வேகமும் கை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். அது என்னமோ இரண்டும் ஒரு சேர எனக்கு அமைந்தது மிக குறைவான தடவைகளே. சரி முடிந்தவரை முயற்சி செய்வோமே!!
பயணம் செய்யும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும். காலை 8 மணியிலிருந்து முன்பதிவு தொடங்கும். அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிடும். ஆகவே முன்பதிவு செய்ய காலை
7.30 க்கு IRCTC இணையதளத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.- (ஸ்டேஷன்களுக்கான குறியீடுகளை தெரிந்து வைத்து கொள்வது உதவியாக இருக்கும்)
ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் வரும் 8 ம் தேதி பயணம் செய்ய இருக்கிறீர்கள் என்றால் 6 ம் தேதி முபதிவு செய்யலாம். காலை 7 .30 க்கு
மணிக்கு IRCTC ல் நுழைந்துவிடுங்கள். புறப்படும் இடம் சேரும் இடம் ஆகியவற்றை டைப்புங்கள். பின் 7 ம் தேதியை தேர்தெடுங்கள்.
நீங்கள் செல்ல வேண்டிய வண்டியை தேர்தெடுங்கள்.
உங்கள் பெயர், வயது, படுக்கை வசதி, ஆகியவற்றை உள்ளிடு செய்யவும்
"Make Payment " பக்கத்துக்கு செல்லவும். இப்போது மீண்டும் "Plan my Travel " பக்கத்துக்கு வரவும். இனி நீங்க செய்ய வேண்டியது Session ஐ Expire ஆகாமல் மீண்டும் மீண்டும் "Find Trains " ஐ கிளிக் செய்யவும். தளத்தில் ஓடும் மணி 8 ஐ தொடும்போது வலது பக்கத்தில் 8 ம் தேதியில் "Book" ஐ கிளிக் செய்யவும்.
இனி நீங்கள் மேலே சொன்ன அதே வரிசையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆனால் இணையமும், அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருக்க வேண்டும்.
டிஸ்கி: (WWW.REDBUS.IN) ரெட்பசில் புக் செய்யும் போது "TRAIN" என்ற 'கோட்' ஐ டைபி ரூபாய் 50 தள்ளுபடி பெறுங்கள்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 comments:
தேவையான பதிவு நண்பா.
கருத்துக்கு நன்றி நண்பா!!
தகவலுக்கு நன்றிகள்..
Post a Comment
திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்