November 15, 2011

மாநகரமும் மாமனிதர்களும்!


சென்னையில் ஒரு காட்சி. சின்னமலை முதல் கிண்டி வரை தொடர்கிறது பேருந்து பயணம். இரவு 8 மணியை கடிகாரம் தொட்டுசெல்கிறது. ஹோட்டல் லைம் ட்ரீயை தாண்டுகிறது. பின் பாதையில் வந்த ஒரு காரின் கண்ணாடியை பதம் பார்க்கிறது. கண்ணாடி சுக்கு நூறாய் சாலையில் சிதறுகிறது. நத்தையாய் ஊர்ந்த பேருந்து திடிரென வேகம் எடுத்து சாலையில் பாய்கிறது. உள்ளிருந்த மக்கள் ”கார்க்காரன் மேலதான் தப்பு!” என்று பேருந்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். கிண்டி ரயில்வே ஸ்டேஷனை அடைக்கிறது. மின்னலென பாய்ந்து வந்து பேருந்தின் முன் நிற்கிறது கண்ணாடியை இழந்த கார்.
இரண்டு ஓட்டுனர்களும் தங்களின் தாயை மனதார வசவுகிறார்கள். போக்குவரத்து அதிகாரி சம்பவ இடத்தை அடைகிறார். வண்டிகளை காவல் நிலையத்துக்கு ஓட்டி செல்லப்பணிகிறார். நத்தையின் வேகத்தைவிட குறைவான வேகத்தில் நகர்கிறது பின்னால் வந்த வாகனங்கள். உடைந்த கண்ணாடிக்கு 1500 பேரம் பேசுகிறார்கள். தன் பாகத்தை வாங்க அந்த அதிகாரி காவல் நிலையம் வர சொல்லுகிறார். அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது உள்ளிருக்கும், வெளியிலிருக்கும் சனம்! நடத்துனர் வண்டியுள் விரைந்து யாராவது ஒருவரை சாட்சி சொல்ல அழைக்கிறார். யாரும் வரவில்லை!!.
இந்த காட்சிகளை பலர் தங்கள் கேமிரா மொபைலில் பதிவு செய்கிறார்கள்.
பெரிய வண்டியிடம், சிறிய வண்டி தோற்றுப்போய் செல்கிறது! வெளியில் இருந்த பயணிகள் பேருந்தில் ஏற பயணம் தொடர்கிறது.

யார் மீது குற்றம்? இதுவே நம் ஊராக இருந்தால்…?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Unknown said...

என்னத்த சொல்றது?நாட்டோட நிலமை அப்படி இருக்கு?

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

@ஷேக் முஹைதீன் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்