October 15, 2011

பழநி- சில குறிப்புகள்

பழநி!

இந்த பெயரை கேட்டவுடன் பலருக்கு நினைவுக்கு வருவது ’பஞ்சாமிர்தம்’ அப்புறம் மொட்டை!. பல பேரோட கருத்து என்னானா, பழனினா உங்க தலைக்கு மட்டும் அல்ல, உங்க பர்சுக்கும் சேத்து மொட்ட அடிச்சுடுவங்கனுன்னு. காரணம் பல ஏமாத்து பேர்வழிக ஏராளமா இருப்பாங்க!
பழனில இருக்கற அதிகபட்ச பேரு நம்பி இருக்கறது அந்த மலைய மட்டும் தான். இது பெரிய தொழிற்சாலைகள் நிரம்பிய ஒரு ஊர் கிடையாது. அதனால இங்க எல்லா தொழில்களுக்கும் இந்த பழனி மலை தான் அச்சாணி. பல பேர் நேர்மையா தொழில் செஞ்சாலும், சில ஏமாத்து காரங்களால எல்லா பேரும் இந்த கேட்ட பேருக்கு ஆளாக வேண்டி இருக்கு.

ஒரு உதாரணத்துக்கு, நீங்க வெளியூர்ல இருந்து வர்றீங்கங்கறது உங்களோட நடவடிக்கய பார்த்தே சுலபமா கண்டுபுடிச்சுவாங்க. அதானால சன்னதி தெருல நடந்து போகும்போதெ பல குரல்கள் உங்கள வழி மறிக்கும். ‘சார், செருப்ப இங்கயே விட்டுட்டு டோக்கன் வாங்கிங்க’. சரின்னு நிங்களும் அங்கேயெ வீட்டிங்கன்னா பத்து ரூபா கூட கேப்பாங்க. ஆனா மலையோடா அடிவாரம் போகும்போது ‘இலவச காலணி காப்பகம்’ உங்க கண்ணுல படும்.

இங்க வர்ரதுக்கு முன்னாடியே தெரிஞ்சவங்ககிட்டயோ, இங்க வந்து போனாவங்ககிட்டயோ இந்த மாதிரி விசயத்த விசாரிச்சிங்கன்னா நல்லது.

மலை மேல போறத்துக்கு ரோப்கார் (Rope Car) இல்ல இழுவை ரயில் (Winch) ஒரு நல்ல அனுபவம். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்கல வாராம மத்த நாட்கள்ள வந்தீங்னா நல்ல தரிசனம் பார்கலாம்.

பழனிக்கு இப்பொ வரனும்னா ஒரே வழி பஸ்தாங்க. ரயில்ல வரனும்னா இன்னும் சில மாசங்க காத்திருக்கனும். சென்னைல இருந்து வரனும்னா இரவு 7.30 க்கு ஒரு SETC பஸ் (வழி:சென்னை-திருச்சி-திண்டுக்கல்-பழனி) இருக்கு. தனியார் வண்டிகளும்  நிறைய இருக்கு.

இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கு, ஆனா டைப்புரது கொஞ்சம் கஷ்டாமா இருக்கு! அடுத்த பதிவுல பார்க்கலாம்!






இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பொருமையா கொஞ்ச கொஞ்சமாவே போடுங்க தெரிஞ்சிக்கிறோம்...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

:) கண்டிப்பாக. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்