November 03, 2011

Revolution 2020 - ஒரு பார்வை

தமிழ் நாவல்களே வாசிக்காத ஒருவன், ஆங்கில நாவல் வாசிப்பது எப்படி சாத்தியம்? முதன்முதலாய் எனக்கு ஆங்கில நாவல்கள் பரிச்சயமானது புனே நகரில். வேலைக்கு சேர்ந்த புதிதில் நண்பர் ஒருவனால் சேத்தன் பகத்தின் “One night at a call center” இரவலாக கிடைத்தது. வசிகரிக்கும் எழுத்து நடை தொடர்ந்து வாசிக்கத் தூண்டியது. அரைக்குறை ஆங்கிலம் தெரிந்தாலே நீங்கள் சேத்தன் பகத்தை வாசிக்கலாம்.


“Five point someone” என்கிற இவரது படைப்பு ”3 இடியட்ஸ்” என்ற ஹிந்திபட மாக வெளிவந்தது. இப்போது தமிழில் “நண்பன்” ஆகவும் மொழிமாற்றம் ஆகிறது. முடிந்தால் “One night at a call center” யும் அவரின் மற்ற நாவல்களையும் வாசித்து விட்டு Revolution 2020 க்கு வாருங்கள்.

வாரணாசியில் வாழும் கோபால், ஆர்த்தி, ராகவ் மூவரும் பால்ய நண்பர்கள். IITல் சேர்ந்து வாழ்க்கையில் சாதிப்பது இவர்களது லட்சியம். இவர்களது வாழ்வில் லஞ்சம், காதல், ஆசை/கனவு எப்படி இவர்களை மாற்றுகிறது என்பதை ஹிந்தி மசாலாவில் பொரித்தெடுத்து தந்திருக்கிறார் பகத்.

கோபால் ஆர்த்தியை காதலிக்கிறான்.ஆனால் ஆர்த்தி ராகவை விரும்புகிறாள்.

கோபாலின் அப்பாவிற்கு சொந்தமான நிலத்தை, அவனது சித்தப்பா போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றுகிறார். இதனால் நொடிந்துபோன கோபாலின் அப்பா அவனை IITல் சேர்ப்பதே லட்சியமாக கொள்கிறார். ஆனால் நுழைவு தேர்வில் தவறுகிறான். ராகவ் நல்ல மதிப்பெண்கள்கள் பெற்று IITல் சேர்கிறான். கோபாலோ பயிற்சி வகுப்பில் சேர்கிறான். ஆர்த்தி விமான சிப்பந்தியாக (Air Hostess) வர வேண்டுமென விருப்புகிறாள்.



ஆர்த்தியுடன் போனிலும், சாட்டிலும் தொடர்ப்பு கொள்கிறான். ராகவை ஆர்த்தி விரும்புவதை வெறுக்கிறான். எப்படியாவது அவர்கள் விலகிவிட வேண்டும் என்று நினைக்கிறான். ஒரு வருட இடைவெளியில் மீண்டும் நுழைவுத்தேர்வை எதிர்கொள்கிறான். மீண்டும் IITல் இணையும் வாய்ப்பை இழக்கிறான். தன் சொந்த ஊர் திரும்புகிறான். ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறுவதாக தன் தந்தையிடம் கூறுகிறான். மனமுடைந்த அவர் இறந்துபோகிறார்.

ராகவ் IITல் தேறிவிடுகிறான். ஆனால் ஒரு பத்திரிக்கையாளனாகவே விரும்புகிறான். அதே போல உள்ளுர் பத்திரிக்கை ஒன்றில் வேலையில் சேர்கிறான். கோபால் தன் நண்பன் மற்றும் உள்ளுர் அமைச்சர் உதவியுடன் தன் சித்தப்பாவிடம் இருந்து இழந்த நிலத்தை மீட்கிறான். மேலும் அமைச்சரின் உதவியுடன் ஒரு கல்லூரியை நிறுவுகிறான். தவறான வழியில் கல்லூரியை வளர்ப்பதாக ராகவ் கோபாலின் கல்லூரியை பற்றி தினசரியில் எழுதுகிறான். மோதல் முற்றுகிறது. முடிவில் என்ன நடந்தது? கோபால் கல்லூரியை நிறுவினானா? ஆர்த்தி-ராகவ் காதல் வென்றதா? உள்ளுர் அமைச்சர் ராகவை என்ன செய்தார்? போன்ற பல கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் பதில் கூறியுள்ளார் பகத்.



சேத்தன் பகத்தை தொடர்ப்பு கொள்ள அவரது இணையத்தில் http://www.chetanbhagat.com/ தொடர்ப்பு கொள்ளுங்கள்.



புத்தகத்தை இணையத்தில் வாங்க..

Links to order book online

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

shortfilmindia.com said...

interesting ..

ananthu said...

சேத்தன் பகத் நாவல்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ... உங்கள் பகிர்வுக்கு நன்றி ...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

@shortfilmindia.com & ananthu
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

ture said...

bonus veren siteler
betmatik
mobil ödeme bahis
betpark
tipobet
kralbet
kibris bahis siteleri
poker siteleri
slot siteleri
CGPRJ3

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்